Posts

Showing posts from February, 2018

வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா

வள்ளலார்   தமிழ்ப்   பள்ளியின்   மூன்றாமாண்டு   பொங்கல்   விழா ,  பிப்ரவரி   மாதம்  3 ம்   தேதி   சனிக்கிழமை   கிரான்பெரி   நகரில்   நடைபெற்றது .  பொங்கல்   விழாவையொட்டிப்   பல்வேறு   போட்டிகள்   குழந்தைகளுக்கு   நடைபெற்றன .  மாறுவேடப்   போட்டி ,  மழலைப்   பாடல்கள்   போட்டி ,  செய்யுள்   போட்டி ,  பழமொழிகள்   போட்டி ,  நா   நெகிழ்   போட்டி ,  வினாடி   வினா   போன்ற   பல   போட்டிகள்   நடைபெற்றன .   காலை  11 மணி   அளவில்   விழா   தொடங்கியது .  விழாவிற்கு   பள்ளி   தலைமையாசிரியர்   சசிகுமார்   ரெங்கநாதன்   தலைமை   வகித்தார் . விழாவினைப்   பள்ளி   ஆசிரியர்கள்   ஹம்சா   நாராயணன் ,  சமுத்திரா   அய்யப்பன்   தொகுத்து   விழங்கினர் .  பள்ளியின்   உதவி   தலைமை   ஆசிரியர்   இந்து   வெங்கட்   அனைவரையும்   வரவேற்றுப்   பேசினார் .  முதலில்   குழந்தைகளின்   மாறுவேடப்   போட்டி நடந்தது .  தமிழகத்தைச்   சார்ந்த   பல்வேறு   ஆளுமைகளின்   வேடம்   அணிந்துக்   குழந்தைகள்   மாறுவேடப்   போட்டியில்   கலந்து   கொண்டது   கண்கொள்ளாக்   காட்சியாக   இருந்தது .  தொடர்ந்து   பள்ளியின்   உதவி   தலைமை   ஆசிரியர் ச