Posts

Showing posts from May, 2018

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா

Image
நியூஜெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு நிறைவு ஆண்டு விழா, கடந்த ஞாயிறு, மே 6ம் தேதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நியூஜெர்சி, ப்ளைன்சுப்ரோ நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில், நண்பகல் 2மணித் தொடங்கி இரவு 9மணி வரை விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.   நிகழ்ச்சி நண்பகல் 2மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி.சமுத்திரா, திருமதி.ஹம்சா, திருமதி.லட்சுமி, திருமதி.கிருபா, திரு.சண்முகம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர் திருமதி.லட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.   வள்ளலார் பறையிசைக் குழுவின் பறையிசையுடன் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. முதன் முறையாக மேடை ஏறிய வள்ளலார் பறையிசைக் குழுவினர் மிகவும் சிறப்பாக நம் பாரம்பரிய இசையை இசைத்தனர். பறையிசையைப் பெற்றோர்கள் வெகுவாக ரசித்துப் பாராட்டினர்.   பறையிசையைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. வள்ளலார் தமிழ்ப் பள்ளி எப்பொழுதும் மாணவர்கள் பாடல்க